Wednesday, September 23, 2009

நல்வரவு

அன்பு உள்ளங்களே !
           உங்கள் அனைவரையும் அன்புடன் யோகக்குடிலுக்கு அனுபவம் அடைவதற்கு அழைக்கின்றேன் .
           ஆன்மிகம் என்பது சடங்கு முறை அல்ல. தன்னை தான் அறிந்து மீண்டும் பிறவா நிலை அடைவது. அத்தகைய அனுபவம் அடைவதற்கு அடியேன் சில ரகசிய முறைகள் வைத்து இருக்கிறேன். அதாவது உபதேசம் என்று அதை அழைக்கலாம்.
   எப்படி காம இச்சைகளை ரகசியமாக அனுபவிக்கின்றோமோ அது போலவே உபதேசமும் மறை பொருளாகவே கையாளப்படுகிறது .
         உபதேசம் அறிவதால் நெற்றிக்கண் விழிப்பு பெறுகிறது. இது உபதேசம் அறிந்த நாற்பது நாட்களுக்குள் நடைபெறுகிறது. மேலும் நாத ஒலி கேட்கிறது .
        இந்த நாத ஒலியைதான் ஓம் என்றும், ஆமேன் என்றும், ஹு என்றும் பலவேறாக அழைக்கிறார்கள் .இதை முன்னிருத்திதான் வள்ளுவர் 

       செல்வத்துள் செல்வம் செவிசெல்வெம், அச்செல்வம் 
       செல்வத்துள் எல்லாம் தலை.           ௪௧௧-திருக்குறள் .

 என்று குறிப்பிடுகிறார் .
     அடக்கினும்  அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் 
     அடக்கினும்  அடக்கொணாத அன்பெருக்கும் ஒன்றுளே
     கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் 
     நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.
என்று எனது மனசிக குரு சிவவாக்கியர் தனது பாடல் வழியாக தந்துள்ளார் .  


Best regards,
Sivayogi
tel.:+919444190205
fax:
yogakudil@gmail.com
http://www.yogakudil.blogspot.com

No comments:

Post a Comment

Thank you for your valid opinion....