Saturday, January 29, 2011

காமம்

மதம் மறப்போம்!                                        மனிதம் வளர்ப்போம்!  
                                      

காமம் 
அன்பு உள்ளங்களே! 
               இறைவுணர்வுடன் எழுதுவது.....

                        காமம் என்பது இன்றிய சுழலில் பாலுணர்வு என்று மட்டுமே உணரப்படுகிறது. காமம் என்பது ஆசை என்றுதான் பொருள் படுகின்றது. ஆசைகளை தீர்க்கும் ஒன்றினை காமதேனு என்றும் காமம் கடந்தவரே ஞானி என்றும் அழைப்பதை கொண்டு அறியலாம். மனதில் தோன்றும் ஆசைகளில் பாலுணர்வே அதிகம் இருப்பதால் காமம் என்பது பால் சார்ந்த ஒன்றாக குறிக்கபடுகின்றது. நாமும் அத்தகைய பொருளாகவே கொள்வோம்.


                       இயற்கை அல்லது கடவுள் இந்த பூமி பந்தில் எண்ணிக்கை அற்ற உயிர்களை உருவாக்கி தன் இனத்தை வளர்ப்பதை தனது தொழிலாகக் கடை பிடிக்கவே காமம் (செக்ஸ்) என்ற ஒன்றை பரிசாக தந்துள்ளது. 


                       மனிதனின் அணுகுமுறை மற்ற உயிர்களைப்போல் அல்லாமல் மாறுபட்டு இருக்கிறது. மனிதர்களுக்குலேயும் பலவகையான கருத்தோட்டம் நிலவுகின்றது. சிந்திக்க தெரிந்த விலங்காக இருப்பதால் காமத்தை எப்படி அணுகுவது என்று முன்யோசனையுடன் செயல்படுகிறான். 


                      ஆணும் பெண்ணுமாக இணைவது இனவிருத்தி செய்வது பொதுவாக இருப்பினும் மனிதன் தனது அறிவால் பலதரப்பட்ட குழுவாக இருப்பதால் ஆண் பெண் உறவுக்கு சடங்கு முறைகளை வகுத்துள்ளான்.


                     ஒவ்வொரு  உயிரும் பருவம் அடைந்ததும் காமத்திற்கான உடல் உந்துதல் ஏற்பட்டு தனது தேவையை நிறைவேற்ற துடிக்கின்றது. மனித உயிர் மட்டும் தனது தேவையை தானே அடக்கவும், தகுதி பார்த்து உறவு கொள்ளவும் செய்கின்றது.


                      இத்தருணத்தில் மனிதனுக்கு ஏற்படும் உணர்வை காதல் என்று அழைக்கின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற உயர் பண்புள்ளவரின் காமம் புனிதமானதாகவும், வெறும் உடல் தேவைக்கு மட்டுமே காமம் இருந்தால் அதை புனிதமற்றதாகவும் கருதுகின்றோம்.  


                   புனிதமோ,புனிதமற்றதோ எல்லா உயிருக்கும் காமம் அரும்புவது இயல்பானது. பிறப்பால் எதாவது குறை என்றால் காமம் அரும்புவது தடைபெருகின்றது. காமம் கடவுளை அடைவதற்கு தடை என்பது அறியாமை.


                   காமத்தை அடக்குவதால் தன்னை புனதமானவன் என்று கட்ட முற்படுவதற்கு காரணம் அந்த நபரின் ஆணவம். இறைகையை விட மேலான அறிவு எனக்கு என்று நினைப்பதுவே இத்தகைய  மடத்தனம் செய்வதற்கு ஆதாரமாக இருக்கிறது. 
      
                 காமம் அதன் இயல்பில் அழகானது. அதற்கு தடை செய்தாலும் தனக்குள் உந்துதல் ஏற்பட்டு வெளியாக வேண்டிய விந்து ,சுநிதம்,வெளியே வந்துவிடும்.  


                உண்மையை தேடுவதற்கு காமம் தடை என்று எண்ணி அதனுடன் போரடி இரண்டும் அற்ற நிலையை அடைவதால் தானும் நிறைவடையாமல் இயற்கையையும் அவமதிக்கிறோம் என்ற எண்ணம் வளர வேண்டும். 


கதை - ஒன்று .

புனித யாத்திரை 


            அவள் அவளது தனி அறையில், மனதுடன் அர்த்தமற்ற உரையாடலில் முழ்கியவலாய் உடலால் தனித்து இருந்தால்...


           சரியாக மணி என்ன என்று சொல்லமுடியாத சுழல், விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. திடிரென வளமான கை தனது வாயை முடியாதும் அவளது மனப் போராட்டம் நின்று வாயை திறக்க முயற்சி செய்தாள்.        
  
          அதன் கைகளில் ஏதோ மயக்க மருந்து மெல்ல தனது நினைவை அவள் இழந்தாள்.  


          உறக்கமா மயக்கமா தெளிந்தது எது என்று அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. உடல் வலி, மனசஞ்சலம்