Wednesday, July 06, 2011

பஞ்சாட்சரம்

 மதம் மறப்போம்!                   மனிதம் வளர்ப்போம்!
பஞ்சாட்சரம்  
அன்பு உள்ளங்களே!  
   இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து அட்சாரமகிய நமசிவய என்பதை குறிக்கும். தமிழ் கூறும் நல் உலகம் அனேக நன்மைகள் தரும் பலவிதமான சித்தாத்தங்களை மனிதர்களுக்கு தந்து தனது தனித்தன்மையை தக்கவைத்துள்ளது.  
     எழுத்துக்களை அட்சரம் என்பது வழுக்கு, அப்படி உள்ள எழுத்துகளில் இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் சிறப்பானதாக எடுத்து தமிழ் முன்னோர்கள் கடவுளை அறியவும், மனதை ஒரு நிலைப்படுத்தவும், தன்னிலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்தினார்கள்.
     நாம் சிவம் என்பதை குறிக்கும் விதமாக நமசிவய என்றார்கள். காரணம் நாம் ஐந்து பொருள்களின் தொகுப்பு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் ந என்பது நீரை, ம என்பது மண்ணை, சி என்பது நெருப்பை, வ என்பது காற்றை, யா என்பது வானை குறிக்க அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.
   உலகமும் இந்த ஐந்து பொருள்களை கொண்டே இருக்கிறது . அணைத்து உயிர்களும் இந்த ஐந்தின் தொகுப்பாக உள்ளது. சிவத்தில் நாமும் ஒருவர் என்பது உணர்த்த சிவயநம என்றும் உரைப்பர்.   
   உலக தோற்றம் வெற்றிடத்திலிருந்து அதாவது யா என்ற வானத்திலிருந்து. எனவே தன் யா இருக்க பயம் ஏன்? என்று கூறுவார்கள்.     
    யாவை தவிர்த்து மற்ற நான்கும் பூதம் என்பார்கள், சிலர் ஐந்தையும் பூதங்கள் என்றே அழைக்கிறார்கள். பூதம் என்றால் பெரியது. அதற்குமேல் எதுவும் இல்லை என்று பொருள்.  கிணறு வெட்ட பூதம் வந்த கதை - மண்ணை எடுத்தால் தண்ணீர் வரும், கற்று அவ்விடத்தை அடைத்துக்கொள்ளும், வெப்பம் தோன்றும், வெற்றிடம் இருக்காது, மண்ணாகிய பூதத்தை தோண்டினால் ஏனைய மூன்று பூதங்கள் தோன்றும். வெற்றிடமாகிய ஒன்று இல்லாமலேயே போகும்.                  
           மண்ணுக்குள் நான்கு பூதங்களும், தண்ணீருக்குள் மூன்று பூதங்களும், நெருப்புக்குள் இரண்டு பூதங்களும், காற்றுக்குள் ஒரு பூதமும் அடக்கமாக உள்ளது.
  அன்பு  உள்ளமே இங்குதான் சூட்சமம் உள்ளது. காற்றுக்குள் இருப்பது பூதமல்ல கடவுள். ஆனால் அதை அறிவது அவ்வளவு எளிதல்ல காரணம் அதை வெற்றிடம் என்றுதான் மனித உணர்வு அறியும். அதை அறிவதற்கு என்று யோக வழிகளை கண்டு கடவுளை அடைந்தவர்கள் சொற்பமாகவே இருக்கிறார்கள்.
        மண்ணுக்குள் எப்படி நான்கு பூதமோ அப்படியே நமது உடலுக்குள் நான்கும், 
அந்த நான்கு பூதத்திற்கு  நன்றியுடன் இருந்து ஐந்தாவதாக இருக்கும் கடவுளை அறிவதற்கு இந்த பஞ்சாட்சரம் உதவுகிறது.   
    கடவுளை அறிவதற்கு மனம் எண்ணமற்ற நிலையை அடைய வேண்டும். மனம் எண்ணமற்ற நிலை அடைய முதலில் பல எண்ணைகள் இல்லாமல் இருக்க பழக வேண்டும் ஆகவே, மனதை ஒரு நிலை படுத்த இந்த பஞ்சாட்சரத்தை மனதுக்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். இருக்கவும் சொன்னார்கள்.
     பின்னே வந்த மனிதர்கள் அதன் ஆழம் புரியாமல், அதனைக்கொண்டு வியாபார நோக்கில் எழுத்துக்களை மாற்றி அமைத்து புதுப்புது விளக்கங்களை தந்து மனிதர்களை தடம் மாற்றி விட்டார்கள்.
     உதரணமாக, வசியம் செய்வதற்கு வயநமசி, தொல்லைகள் அழிய யநமசிவ, நாசம் செய்வதற்கு மசிவயந, என்று மனதிற்குள் உச்சரிக்க சொன்னார்கள்.
      மேலும், பஞ்சாட்சரம் பெற்றிய தகவல்.
நமது ஐவிரல்களும் இந்த ஐந்து எழுத்துக்கு என்று முறையே ந சிறுவிரளுக்கும், ம மோதிர விரலுக்கும், யா நாடு விரலுக்கும், வ ஆள் கட்டி விரலுக்கும், சி கட்டை விரலுக்கும், என்று புரிந்து அவைகளின் மூலம் நமது உடலின் தட்பவெப்ப நிலையை சரிசெய்வதற்கு உத்திகளை தந்துள்ளார்கள்.
  மேலும் தகவல்களுக்கு அடியேனை அணுகவும்......