Thursday, June 30, 2011

கடவுளும் தெய்வமும்

கடவுளும் தெய்வமும்
மதம் மறப்போம்!                                            மனிதம் வளர்ப்போம்!   
அன்பு உள்ளமே!
                இங்கே கடவுளும் தெய்வமும் வேறு என்பதையும் அதன் ஆழமான பொருளையும் அறிய உதவும் வகையில் இதை எழுதியுள்ளோம்.
               கடவுள் என்பது கடத்தில் இருப்பது. தெய்வம் என்பது சிறப்பாக இருப்பதால் அடையும் தன்மை. எனவே தான் வள்ளுவர்
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்னுரையும் 
            தெய்வத்துள் வைக்கப்படும். திருக்குறள்-50
என்று இபுவிதனில் சிறப்பான வாழ்வை வாழ்பவர்களை தெய்வம் என்று உரைக்கின்றார்.அதே சமயத்தில் தெய்வீக தன்மை பெற்றவரை விட தனது கணவனே சிறந்தவன் என்று வாழும் பெண்ணையே விரும்பும் பொது பொழியும் மழை போன்றவள் என்கிறார்.அதற்க்கான திருக்குறள் 
             தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் 
             பெய்யனப் பெய்யும் மழை .திருக்குறள்-55 .
            தெய்வம் என்ற சொல் உன்னத சக்தி என்ற பொருள் மருவி  அதுவே உன்னதம் அல்லது முதன்மை என்ற வழக்கு தொடர்கிறது. தெய்வம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் LORD என்று அழைக்கப்படுகிறது.கடவுள் என்பது GOD என்று சொல்லல் அழைகப்படுகிறது.உதரணமாக LORD கிருஷ்ணா, LORD MURUGAN ,  LORD JESUS ,
            இக்கருத்தை மேலும் வலியுரத்தவே
              தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் 
              மெய்வறுத்த கூலி தரும்..திருக்குறள் -619 
 இக்குறள்  மேற்கோள்  காட்டபடுகிறது. 
                  தெய்வ வழிபாட்டையே நாம் கடவுள் வழிபாடாக நினைக்கிறோம். மதம் என்பது தெய்வீக சாதனை செய்தவர்களின் புகழ் பரப்பும் தளமாக  இருப்பதால், மதம் சார்ந்த மனிதர்கள் கடவுளை அடையாமல் அந்த மதம் சார்ந்த தெய்வங்களை அடைந்து மற்ற தெய்வங்களை குறை குறி ஓயாத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.    
                    பலபல தெய்வங்கள் இருப்பது உண்மைதான். ஆயினும்,கடவுள்  என்பது ஒன்று தான். மதங்களை மறந்து கடவுளை அடைந்தால் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாக வாழலாம். மனிதர்கள் தெய்வங்களை பின்தொடருவதால்  உனது தெய்வம் எனது தெய்வம் என்று பாகுபாடுகள் வளர்ந்து நிம்மதியை தொலைத்தவர்களாக இருக்க நேரிடும்.
          அறிவும், ஆற்றலும் கொண்ட மனிதர்கள் தெய்வத்தின் பின்னே சொல்வதால் வேதனையும், வன்முறைகளும் அரங்கேறுகின்றது. மாறாக, தனக்குள் உறையும் கடவுளை அறிந்தால்,  தானும் இன்புற்று பிறரும் இன்புற வழிகள் பல பிறக்கும்.....