கிறிஸ்துவம்

மதம் மறப்போம்!                                                            மனிதம் வரப்போம்!  


அன்புள்ளங்களே!...
            உலகம் பல உன்னதமானவர்களை சந்தித்து உள்ளது. அதில் முதலிடத்தில் விளம்பரப் பட்டு இருப்பவர் புனிதர் இயேசு. இவர் யூத வம்தத்தை சேர்ந்தவர். ( மத்தேயு என்ற சுவிஷசேச நூலிருந்தே எடுத்தாளப் படுகிறது )  மத்தேயு 1 :16 யோக்கோபு - மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான் அவனித்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
                    இயேசு என்ற ஒரு மனிதர் பிறந்து வாழ்ந்துள்ளார். ஆனனும், அவரது பிறப்பு புதுமையானது. பரிசுத்த ஆவியால் கன்னி கற்பம் அடைந்தாள் என்றும், அவரது பிறப்பை முன்னமே திர்கதரிசிகளால் உரைக்கப்பட்ட தகவும் எழுதப் பட்டு உள்ளது.
                     முதல் மகன், கன்னி வயிற்றில் பிறந்தவர், என்பதில் ஆச்சரியம் இல்லை. பரிசுத்த ஆவியால் கற்பம் அடைந்தாள் என்பது இன்றும் விளங்கி கொள்ளமுடியாத ஒரு புதிராக உள்ளது. புதிர்கள் இருந்தால் தான் புனிதம் என்று விளம்பரம் செய்யமுடியுமோ என்னவோ? அப்படித்தான் அவரது வரலாறை எழுதி உள்ளார்கள்.
                   பிறந்த பொழுதே அது புனிதமானது என்று அறிந்திருந்தால் அதன் அனைத்து நடவடிக்கைகளை பதிவு செய்து இருக்கலாம். ஆனால், அவரது புனிதம் அறிந்த பின் அவரது வரலாறை எழுதியதால் எதோ சில திரிபுகள் அந்த வரலாற்றை தந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்ற அவரது புகழ் பரப்பிகளுக்கு தேவையாய் இருந்துள்ளது.
              ஒரு மனிதன் இந்த பூமியை வந்தடைந்துள்ளான். அவனது புரிதல் நிமித்தம் அவனின் புனிதம் உணரப்பட்டு, அவனை கடவுளுக்கு நிகராக மாற்றி தொழில் முறை செய்வதற்கு ஏதுவாக உலகம் முழுவதும் அவனை விளம்பரம் செய்து ஒரு கூட்டத்தை உருவாக்கி நிவாகம் செய்கிறார்கள்.
                      குழப்பம் இல்லா உண்மை இயேசு என்று அழைக்கப்படும் ஒரு நல்ல மனிதன் கிறிஸ்து என்று அறியப்பட்டுள்ளார்.
                      யூதர்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் கோட்பாடுகளை கொண்டு தங்களது வாழ்வை வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசாக அல்லது அவர்களின் மத்தியில் இயேசு பிறந்துள்ளார். எனவே யூதக் கொள்கைகள் அவருக்கு அறியும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
                          ஏரோதுராஜா அவர் பிறந்த காலத்தில் ஆட்சி செய்துள்ளார். அவர் தனக்கு எதிராக ராஜவாகும் குழந்தை பிறந்துள்ளது என்று அறிந்து தன் ஆட்சி பாலத்தால் குழந்தைகளை கொற்றுவிட திட்டமிட்டதால், இயேசு பிறந்த பெத்லேகேம் என்ற இடத்தை விட்டு எகிப்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
                ஆயினும், யேசுவைபற்றி எழுதிய மாற்கு இதை குறிப்பிடவில்லை. இயேசு என்ற மனிதன் அறியப்பட்டப் பின்பே அவரது வரலாறு எழுதப்பட்டதால் ( லூக்கா 1 : 2 '3 ,)  மேல் குறித்தவைகள் உண்மைக்கு புறம்பாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது.
                       அதற்க்கு மேல் அவர் வளர்ந்த விதம் மற்றும் அவர் சந்தித்த சுழல்கள் காணாவில்லை. யோவான் என்ற ஒரு பிரசங்கி ஒட்டகம் தொலை உடுப்பகவும், வெட்டுக்கிளி மற்றும் தேன் உணவாகவும் கொண்டு, பரலோக ராஜ்யம் சமீபமாய் உள்ளது என்று போதித்துக் கொண்டு இருந்துள்ளார்.
                    அவரை யேசுவானவர் சந்தித்து ஞானஸ்தானம் பெற்றார். அதன் பின் தானும் போதிப்பதை மேற்கொண்டு நோய்களை குணமாக்கினார் என்றும்  குறிப்புள்ளது.
                   இயேசு செய்த அற்புதங்கள் எப்படி நிகழ முடியும் என்ற கேள்வி இருப்பின், அவர் தியான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது பதிலாக அமையும். அவர் பல தேசங்கள் சென்று வித்தைகள் பயின்றவராக இருக்கும் வாய்ப்பு உள்ளது. அவரை பற்றிய வரலாறு முழுமையாக இல்லை எனினும், இயேசுவை சோதனைக்கு உட்படுத்த ஆவியவர் ஆவல் கொண்டார் என்று மத்தேயு 4 : 1 - 11 இல் குறிப்பிடப் பட்டுள்ளது.
     மேலும், நாற்பது நாட்கள் விரதம் மேற்கொள்வதை அவர் கடைபிடித்துள்ளார். தேவதூதர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.          
               இயேசு அற்புதங்கள் செய்ய வல்லவராய் இருந்தார் என்பதை அவரைப் பற்றிய அனைத்து குறிப்புகளிலும் இருந்தாலும், அனைத்தும் இல்லை. எனவே எழுதப்பட்டதை விட அதிகமாகவோ, குறைவாகவோ அற்புதம் செய்து இருக்கலாம்.
                இயேசுவின் போதனைகள் மனித ஒழுக்கத்தை மையப் படுத்தியே இருந்தாலும், அவர் வளர்ந்த அல்லது அவருக்கு பிறப்பை நல்கிய மதமான யூத மனிதர்களுக்கு அருவெறுப்பை உண்டாக்கியது.
                      இயேசு தனக்கான சீடர்களை உறுவாக்கிக் கொண்டார், அவர்களில் சிலர் சமூக அந்தஸ்து பெற்றவர்களாகவும், சிலர் சராசரி யாகவும், இருந்தார்கள்.
              இயேசு அற்புதர் மட்டுமில்லாமல் நல்ல சிந்தனைகளை துண்டும் நல்ல போதகராகவும் இருந்தார். ஓய்வு நாளை அனுசரிப்பதை யூதர்கள் வழிமுறை செய்து இருந்தார்கள் ஆனால் இயேசுவின் பார்வையோ மாறுபட்டு இருந்தது.
                 யோவான் மற்றும் பல போதனையாளர்கள் சொன்னதை போலவே இயேசுவும் பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்று சொன்னார். இருப்பினும், இவர் கபடமற்ற பிள்ளை மனமே அதற்க்கு தகுதி என்றும், புற சாயங்கள் தேவையற்றது என்றும் வழிமுறை சொன்னார்.
                 அவரின் போதனைகள் பெரிய புரட்சிக்கு வித்தாக அமைய இருந்தது. யுதமதமே இல்லாது ஒழியும் அபாயம் ஏற்பட்டு, கள்ளர் கூகையாக மாற்றிவிட்டிர்கள் என்று மத வழிபாட்டு தளங்களில் காணிக்கை பொருள் விற்பதை சாடினார்.
                  ஏழை மனிதர்களும் பாக்கியவான்கள், மகிழ்வாய் இருப்பவர்களும் பாக்கியவான்கள், என்று எல்லா தரப்பு மனிதனும் இறை அச்சமுடன் இருப்பின் பிதாவின் அருள் கிடைக்கும் என்றும், வஞ்சனையும், பொய்யும் பிதாவுக்கு எதிரானது என்றும்  போதித்தார். ( மாற்கு 5 : 4 - 17 )
    மேலும், நானே வழியும் சத்தியமும் என்று கூறியதும் மதப் பற்றாளர்களுக்கு வெறுப்பை தந்தது. சகித்துக்கொள்ள முடியாத அவர்கள் இயேசுவை குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தி நியாயம் கேட்டு அவருக்கு மரண தண்டனை வழங்கி அவரை கடவுளாக தனது மதத்திற்கு மாற்றிக் கொண்டார்கள்.              
                 மனிதர்கள் யாவரும் உன்னதமானவர்களே, ஆனால் எல்லாரும் உன்னத வாழ்வை வாழ்வது இல்லை. அல்லது தன்னை தன் நிலையை உணர்வதும் இல்லை.
                              இயேசு தன்னை அறிந்தவராய் தன் நிலை உணர்ந்தவராய் இருந்தார். அவர் வாழ்வதால் அறியாமை அழிக்கப்பட்டு மதபோதகர்கள் ஒடுக்கப் படுவார்கள் என்ற காரணத்திற்க்காக குற்றமற்றவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். வெற்றியும் கண்டார்கள்.தங்களது நிலையை தக்கவைத்துக் கொண்டார்கள்.                  
                                 இயேசுவை ஒரு சிறந்த மனிதனாக ஏற்றுக் கொள்ளாமல் கொலை செய்து அவருக்கு கடவுள் என்ற மாயப் போர்வையை போர்த்தி தங்களது வயிற்றை வளர்க்கும் உத்திகளை கையாண்டார்கள்.
                  கடவுள் என்பதை உணர்வது, மேலும் அதற்க்கு உண்மையுடன் இருப்பது அவசியம், என்று இயேசு போதித்தாலும் கடவுளின் மறு அவதாரம் இயேசு என்று பொய் சொல்லி அவரின் பெயராலே இன்று யூத மதம் பரப்பப் பட்டுள்ளது.
                         மனிதனுக்கு கடவுள் ஏன் தேவை? என்ற கேள்விக்கு இயேசுவின் பதில் மனிதன் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்தவனாய் வாழ்வதற்கு என்ற இருந்தது.
               மனம் திருந்துங்கள் தேவ ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்ற தனது போதனையை செய்தார் (மத்தேயு -4 ;17 )
               அவர் அற்புதங்கள் பல செய்தவராய் இருந்தானும் அவரது போதனை வெளிவேசம் தேவை இல்லை என்றும், குழந்தைகளின் மனநிலை போல் இருக்கவேண்டும் என்றும் இருந்தது.
              சகோதரன் இடத்தில் அன்பு பாராட்ட வேண்டும். மனத்தளவிலேயே குற்றமற்றவனாய் இருப்பது அவசியம். மனதளவில் குற்றமற்று இருப்பின் நாம் தேவாரஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம்.
                 நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று.மத்தேயு 5 -28 .
              இயேசுவின் போதனைகள் மனிதனின் மனதை தூய்மை செய்வதாகவே  இருந்தது. மேலும் பிராத்தனையை ரகசியமாகவே செய்வதை வலியுறித்தினார்.
                     மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்கு பலன் இல்லை. மத்தேயு 6 -1 .
                        அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அன்ஞானிகளைப்போல் வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.மத்தேயு 6 -7 .
                         இயேசுவின் போதனைகள் தனி மனிதனை மையப்படுத்தியே இருந்தது. தனிமனிதன் ஒருவன் தன்னளவில் கொண்டுவரும் மாற்றமே அல்லது தனிமனித புரிதலே வாழ்வை செம்மையாக்கும் என்று இயேசு ஆழமாக வலியுறித்தினார்.
                        இயேசுவின் போதனைக்கு எதிராகவே இன்றைய பாதரிமார்கள் செயல்படுகிறார்கள். ஒலிபெருக்கி கொண்டே ஜெபம் செய்வது. தசமபாகம் பெறுவது. என்று பலவிதத்தில் முரண்படுகிறார்கள்.
                        
                 அன்பர் இயேசுவின் போதனைகள் மனிதனின் ஆளுமையை வளர்த்து அடுத்தவரும் வாழ வழிசெய்வது என்ற விதத்தில் இருந்தது.

               

 













2 comments:

  1. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை குறிப்பே பல சந்தேகங்களை எழுப்ப கூடியதாய் இருக்கிறது
    அய்யா இயேசு அவர்கள் தவம் மேற்கொண்டதற்க்கான குறிப்புகள் இருப்பின் பகிரவும். நன்றி அய்யா

    Micheal Rajnath/Malaysia

    ReplyDelete
  2. கட்டாயம் செய்கிறேன் அன்புள்ளமே..

    ReplyDelete

Thank you for your valid opinion....