Saturday, November 20, 2010

சத்சங்கம்

                                                  சத்சங்கம் 
அன்பு உள்ளமே!
    சக்தி சங்கமிப்பதையே சத்சங்கம் என்று அழைக்கிறோம்.இது சனிக்கிழமைகளில் மாலை ௬ முதல் ௯ வரை நடைபெறும். அடியேன் அனுபவத்தை பகிர்வதும், அனுபவத்திற்கு ஏங்கும் அன்பு உள்ளத்திற்கு உதவுவதும் அனுபவம் பெற்ற மனிதர்களின் நூல்களை விளக்குவதும், என அது அமைந்திருக்கும்.   
    கடவுள் என்பது என்ன?, அதை அடைவது எப்படி?, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது?, இது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் நோக்கில் பல தலைப்புகளில் பேசப்படுகிறது.
  தற்சமயம் பௌர்ணமி நேரத்திலும் மாலை ௬ முதல் ௯ வரை நடத்த முடிவேடுக்கப்பட்டு உள்ளது .
         முதல் முழுநிலவு சத்சங்கம் ௨௧/௧௧/௨௦௧௦ ஞாயிறு மாலை ௬ முதல் ௯ வரை நடத்த முடிவேடுக்கப்பட்டு உள்ளது.
         சத்சங்கம் ஒலிஒளி திரையை காண இதை சொடுக்கவும்.
   பௌர்ணமி அன்று அடியேன் எழுதி பாடிய பாடல்கள்.
பாடல் -௧ 
விட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு 
ஆணவம் விட்டிரு 
விட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு
கருமம் விட்டிரு
விட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு
மாயை விட்டிரு
உண்மை உன்னை நோக்கி பாய 
உன்னையே  விட்டிரு 
-------விட்டிரு
நான் என்பது ஆணவம் என்று அதனை விட்டிரு 
நாடகம் என்றே நடக்கும் வாழ்வை நன்றே விட்டிரு 
கோயில் இந்த உடம்பு என்று குலத்தை விட்டிரு
கொண்டாட்டம் உனது உரிமை என்று குறையை விட்டிரு
 -------விட்டிரு
கருமம் என்பது கட்டாயம் இல்லை கருத்தாய் விட்டிரு    
மருவும் உலகில் மாற்றம் தொடரும் செயல்கள் விட்டிரு 
தொடரும் வினைகள் தொடராதிருக்க உன்னை விட்டிரு 
படரும் உறவில் மறையாதிருக்க பந்தம் விட்டிரு
-------விட்டிரு
மயக்கம் விட்டிரு தயக்கம் விட்டிரு -௨
மாறும் உலகில் மாற்றம் தொடரும் பொய்யை விட்டிரு -௨
தோற்றம் மாயை துணிவாய் விட்டிரு -௨
கற்றது மாயை கருத்தாய் விட்டிரு -௨

உண்மை உன்னை நோக்கி பாய 
 உன்னையே விட்டிரு 
-------விட்டிரு




பாடல் - ௨ 
இங்கே இங்கே இங்கே இங்கே பரவசம் இங்கே --௨
ஆடி பாடி கொண்டாடு பரவசம் இங்கே--௩


கண்ட கண்ட கண்ட குப்பை தூரம் தள்ளு --௨
தூய உள்ளம் உனக்கே சொந்தம் பரவசம் கொள்ளு --௩ 
----------இங்கே இங்கே
இல்லை இல்லை இல்லை என்ற உளறல் தள்ளு --௨
உனக்குள் உண்டு உண்டு என்று பரவசம் கொள்ளு --௩
----------இங்கே இங்கே
கல்லை மண்ணை மணியை நம்பும் கருத்தை தள்ளு --௨
தொல்லை இல்லா நிலையை அடைய பரவசம் கொள்ளு --௩
----------இங்கே இங்கே
உண்மை உண்மை உண்மை என்று உணர்ந்து கொள்ளு --௨
உன்னில் நியே மகிழ்ந்திருக்க பரவசம் கொள்ளு --௩
----------இங்கே இங்கே


பாடல் - ௩ 
எங்கு தேடுவேன் இறைவா எங்கு தேடுவேன்
எனக்குள்ளே நீ இருந்தால் 
எங்கு தேடுவேன்
                                                                                               --௨
இங்கிருக்கிறாய் இறைவா இங்கிருக்கிறாய்
நான் இருக்கும் இடத்தில் எல்லாம் 
நீ இருக்கிறாய்
                                                                                               --௨ 
காடு மலை தேடினாலும் கண்ணில் பட மாட்டாய்
மாடு மனை வீடு என்று மறையவும் மாட்டாய்---௨
எங்கு தேடுவேன்


இதயம் துடிக்குதே இறைவா இதயம் துடிக்குதே
உன் அருளால் என் இதயம் துடித்து மகிழுதே ---௨ 
எங்கு தேடுவேன்


நான் துயிலும் வேளையிலும் நீ இயக்கினாய் 
துயில் எழுந்து துன்ப வலை நான் பின்னினேன் ---௨
 எங்கு தேடுவேன்


உன் அருளால் என் நிலையை நான் உணர்கிறேன்
உன் நிலையை நான் அடைய எங்கு தேடுவேன்---௨ 
எங்கு தேடுவேன்


இந்த பாடல்களை ஒலிஒளி காண இதை சொடுக்கவும்  

Thursday, November 11, 2010

உபதேசம்

உபதேசம் 
      உபதேசம் என்பது ஒரு அனுபவம் பெற்ற குரு, தனது  சீடனுக்கு உண்மையை பற்றி விளக்குவது .அதே சமயத்தில் தனக்கு புரியாத ஒன்றை தகவல் அறிவால்  போதிப்பது கிடையாது. இன்று அனேக மனிதர்கள் போதிய அனுபவம் இன்றியே கடவுளை பூஜிக்க வழிகாட்டுகிறார்கள். கடவுள் என்பது நம்பப்படும் பொருள் என்றே அறிவாளி நினைக்கிறான். அதற்கு ஏதுவாகவே பூசாரிகள், மத போதகர்கள், மற்றும் இரண்டாம்தர ஆன்மீக குருக்கள் செயல்படுகிறார்கள் .
                          ஒன்றை உணர்த்துவதற்கு உணர்ந்தவர் அவசியம் . 
      தமிழ் மொழி உண்மை அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவேதான் அதன் வார்த்தை அமைப்புகள் உண்மையை உணர்த்துவதாக அமைந்து உள்ளது. கொய்யா கனி என்று கொய்த கனிக்கு பெயர் வைத்து உண்மையை அறியும் ஆர்வத்தை மறைத்து வைத்துள்ளர்கள். அது போல் அமைந்த சில வார்த்தைகள் ....
துளை இல்லா -மாதுளை. விளங்கும் - விளாம்  பழம்வாழ  முடியாத- வாழை பழம்.  சிறிதாக இருக்கும் -மாம் பழம்.
       மேலும், குரு என்பவர் ஒரு இடத்தை சுட்டி காட்டி அதன் மேல் கவனத்தை வைக்க சொல்வர் அதற்க்குத்தான் இத்தனை பெயர்களும். தெய்வங்களின் பெயர்களும் ஜாதி பெயர்களும், சில ஊர்களின் பெயர்களும் அவ்விடத்தை சுட்டுகின்றன..
       ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்   -மற்றையான்
       செத்தாருள் வைக்கப் படும் 
 என்று வள்ளுவர் இதையே குறிபிடுகிறார்..  
 அடியேன் உங்களுக்கு உபதேசிப்பது  இதையே ..

        காமத்தை விட புனிதத்தில் சிறந்தது என்பதால் இதை அலட்சியம் செய்தல் கூடாது. மேலும் கமாம் எப்படி மறைமுகமாய் அனுபவிக்கப் படுகிறதோ அப்படி இதையும் கவனமுடன் செய்வது நல்லது.